சாந்தனை நாட்டுக்கு அனுப்ப இந்திய அரசு அனுமதி!



இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள சாந்தனை சாந்தனை நாட்டுக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதிக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்ட பின்னா், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா்.


சாந்தனுக்கு கடந்த மாதம் 24ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாா்.

உயா் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவா், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான சாந்தனுக்குப் பல்வேறு உடல் நலப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று மருத்துவா்கள் கூறினா்.


இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருக்கின்றன என்றும், அதேவேளையில் பிற பாதிப்புக்களுக்குத் தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்திய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள சாந்தனின் தாயார் மகனை நாட்டுக்கு அனுப்புமாறி கோரி ஜனாதிபதி உள்ளிட்ட பல்லரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை