இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (06-02-2024) வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் தற்போது நிலவும் மழை நிலைமைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சீரான வானிலை
தீவின் மற்ற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.