மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 158 பேரில் இலங்கையர்களும் கைது!




மலேசியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது செல்லுபடியாகும் விசா இல்லாமல் மலேசியாவில் தங்கியிருந்த 158 சட்டவிரோத குடியேற்றவாசிகளில் இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bercham அடுக்குமாடி குடியிருப்பை ஆய்வு செய்ததில் 358 குடியேற்றவாசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்களில் 158 பேருக்கு மலேசியாவில் தங்குவதற்கு செல்லுபடியாகும் விசாக்கள் இல்லை என்றும் குடிவரவு இயக்குனர் Meor Hezbollah Meor Abd Malik தெரிவித்தார்.

அதன் காரணமாகவே அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 83 ஆண்களும், 54 பெண்களும், 8 சிறுவர்களும், 9 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட 3 சிறுமிகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் இந்தோனேசியா, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் பெரும்பாலோர் உள்ளூர் நில உரிமையாளர்களிடமிருந்து பிளாட்களை வாடகைக்கு எடுத்துள்ளனர்.  

இந்த நடவடிக்கையின் போது சுமார் 560 வீடுகளை நாங்கள் சோதித்தோம், என்று குடிவரவு இயக்குனர் Meor Hezbullah Meor Abd Malik கூறுகிறார்.

வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களை உரிய அனுமதியின்றி வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடக் கூடாது என எச்சரிக்கிறார்.

அவ்வாறு செய்தால், குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 55 (E) இன் கீழ் குற்றங்கள் விதிக்கப்படலாம், இது அதிகபட்சமாக 30,000 மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட பின்னர், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு தங்கள் வீடுகளை வாடகைக்கு வழங்கிய ஒவ்வொரு வீட்டு உரிமையாளரையும் திணைக்களம் விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.
புதியது பழையவை