மட்டக்களப்பில் 2 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் - ஆலய குருகள் ஒருவர் கைது!




மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்டவிரோதமாக சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஆலய குருக்கள் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை நேற்று (19-03-2024) ஆலயத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான பகல் ஆலய பகுதியில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் போது வலம்புரிசங்கு விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குருக்களை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிச் சங்குகளையும் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய குருக்களையும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களையும் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

புதியது பழையவை