மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதிகள் - எய்ட்ஸ் தொற்றில் பல பெண்கள்




விசேட சுற்றிவளைப்பொன்றின் போது நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நடத்தப்படும் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்த இரு பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை இன்று(27-03-2024) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த சோதனையின் போது 53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மருத்துவ சோதனை
அதேவேளை, குறித்த நிலையங்களில் பணிபுரிந்த 137 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சட்டவிரோதமான முறையில் விபச்சார விடுதிகள் நடத்தப்படுவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றச்சாட்டின் கீழ் சிலர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை