நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு!




சப்ரகமுவ, மேல்,வடமேல்,வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (27-03-2024)அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.  

கடல் பிராந்தியங்களில்

திருகோணமலை தொடக்கம்  மட்டக்களப்பு,ஹம்பாந்தோட்டை  ஊடாக காலி  வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடும். 

புத்தளம்  தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான  கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல்  அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் கிழக்குத்  திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,சிரேஸ்ட  வானிலை அதிகாரி.
புதியது பழையவை