இலங்கை தமிழ் இளைஞரின் திறமை



இலங்கை இளைஞர் ஒருவர் இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை போட்டி நிகழ்ச்சி ஒன்றின் குரல் தெரிவு சுற்றில் போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.

மலையகத்தின் பதுளையை சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞரே இவ்வாறு இசை போட்டி நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளார்.


பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் தீவிர இரசிகரான இவர் பாடும் நிலாவின் பாடல்களை திறமையாக பாடியதை பார்த்தும் கேட்டும் இசை அரங்கமே ஆர்ப்பரித்தது.


இந்திரஜித் குறித்த போட்டியில் பங்குபற்றி சிறப்பாக பாடல்களை பாடியதுடன், நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.


முன்னதாக மலையகத்திலிருந்து இந்தியாவுக்கு சென்று குறித்த தென்னிந்திய இசை நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அசானியையடுத்து, தாய்மண்ணுக்கு பெருமை சேர்ப்பதற்காக இசை மேடையேறியிருக்கும் இந்திரஜித்தின் இந்த இசை முயற்சி பலரால் பேசப்படுகிறது.
புதியது பழையவை