டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!




நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்து 55 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 532 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 1,936 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை