மட்டக்களப்பில் மீட்கப்பட்ட ஒரு தொகுதி லேகிய பக்கெட்டுக்கள்



மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி சேர் ராசீக் பரீட் மாவத்தையிலுள்ள கடை ஒன்றிலிருந்து 70  பக்கெட் மதன லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (30-05-2024) காலை இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வர்த்தகர் தற்போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கென தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 70 பக்கெட் மதன லேகியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அங்கிருந்த மோட்டார் சைக்கிளும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்.  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த நபரை முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை