இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்புக்கு விஜயம்!






இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (02-05-2024)காலை மட்டக்களப்பு நகரில் உள்ள காந்திபூங்காவில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் ஏந்திரி என்.சிவலிங்கம்,மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் காலங்களில், மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் நோக்கிய ரயில் சேவையினை விஸ்தரிப்பதற்கு, இந்தியா நடவடிக்கையெடுக்கும் என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர்உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை