மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்கு முன்னுரிமை



மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்குகின்றது என பிரிட்டனின் பொது நலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை குறித்து பாதிக்கப்பட்ட சமூகத்தினர் வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சந்தேகங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக அனைவரையும் உள்வாங்கிய நடைமுறையின் அவசியத்தை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. எந்த பொறிமுறையும் சுயாதீனமானதாக – அர்த்தபூர்வமானதாக – பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை பெறக்கூடியதாக காணப்பட வேண்டும். முன்னைய நிலைமாறுகால செயல்பாடுகளின் தொடர்ச்சியாகவும் பொறுப்புக்கூறலுக்கான பாதைகளை வழங்குவதாகக் காணப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை