சம்பூர் பகுதியில் கைதான பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!



பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க விதிக்கப்பட்டிருந்த தடையை மூதூர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இதேவேளை நான்கு சந்தேகநபர்களும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதினால் அவர்கள் தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் அவர்களையும் விரைவில் விடுதலை செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.



கடந்த (12) ஆம் திகதி நள்ளிரவில் திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி மற்றும் ஏனைய மூவர் என நான்கு பேர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.




தடை நீக்கம்

இதனையடுத்து குறித்த நால்வரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து நால்வருக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அந்த தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை