நேர்முகப்பரீட்சைக்கு சென்ற பெண் - தகாத உறவுக்கு அழைத்த கோடீஸ்வரர்!



கொழும்பில் நேர்காணலுக்கு சென்ற திருமணமான இளம் பெண்ணை கோடீஸ்வர வர்த்தகர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


அடுக்குமாடி குடியிருப்பில் துஸ்பிரயோகம்

சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தேவையான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் வாட்ஸ்அப் மூலம் முறைப்பாடு செய்தவரை அடையாளம் கண்டுகொண்டதாகவும், நேர்முகப்பரீட்சைக்கு வருமாறு அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், இளம் பெண் தனது கணவருடன் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.


இதன்போது இளம் பெண்ணின் கணவரை கீழே தடுத்து நிறுத்தி பெண்ணை மேலே அழைத்து சென்று தவறாக நடந்துகொண்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை