தனது 2 மகள்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து விற்ற தாய்



முல்லைத்தீவில் தனது 2 மகள்களை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து பல்வேறு நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி பணம் பெற்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


34 வயதான பெண் தனது 6 மற்றும் 13 வயதுடைய மகள்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வேறு நபர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13 வயது சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் சந்தேகநபரின் தாயார் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தாயாரின் கைத்தொலைபேசியை பரிசோதித்த போது இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மட்டுமின்றி, தனது அந்தரங்க புகைப்படங்களையும் குறித்த பெண் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு நபர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கைதான பெண்ணுக்கு சமூக நோய்கள் உள்ளதா என்பதை பரிசோதித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்கு முடியும் வரை இரு மகள்களையும் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை