அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் மகிந்த ராஜபக்ச



சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச  தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவரின் உடல்நிலை மற்றும் நாடு முழுவதும் பயணம் செய்யும் போது அரசியலில் ஈடுபடுவதில் உள்ள சிரமம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும் எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.  


1970 இல் முதன்முதலாக 
வழக்கறிஞரரான மகிந்த 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.


அரசுத் தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். இரண்டாவது தடவையாக 2010 ஜனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 ஜனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.


2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.
புதியது பழையவை