மட்டக்களப்பு இளைஞர் விவசாயத் திட்ட வெள்ளிமலை சித்தி விநாயகர் ஆலய மஹோற்சவம்



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் விவசாயத் திட்ட வெள்ளிமலை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவமானது (01-06-2024)பக்திபூர்வமாக  இடம்பெற்றது.

இவ்வாலயமானது கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டு கடந்த வருடம் கும்பாபிஷேகம் இடம்பெற்று, இவ்வருடம் முதலாவது மஹோற்சவம் இடம்பெறுகின்றது.

இவ் ஆலய மஹோற்சவம்  (01-06-2024) ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் (10-06-2024)ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெற உள்ளது.


ஆலலயத்தின் மஹோற்சவமானது சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.






புதியது பழையவை