மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் பணிப்புரை



நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை
நாட்டில் 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை
சீரற்ற வானிலை
அதாவது இயற்கை அனர்த்தங்களினால் முற்றாக சேதமடைந்த வீடுகளை, அரச நிதியை பயன்படுத்தி எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் புனரமைத்துக் கொடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.



இந்த நடவடிக்கைகளுக்கு முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
புதியது பழையவை