மோட்டார் சைக்கிளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார்



அதிவேகமாக சென்றதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளை அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி துரத்திச்சென்று மோட்டார் சைக்கிளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் அதிகாரிகள் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியிலும் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றதாகக் கூறப்படும் பத்தொன்பது வயது இளைஞன், மோட்டார் சைக்கிளை தன்னுடன் எடுத்துச் சென்று பின்னர் சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வைத்தியசாலையில் அனுமதி

இந்த துப்பாக்கிச்சூட்டில் இளைஞனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிகிச்சைக்காக பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
புதியது பழையவை