மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிரடி சோதனை!




மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (09-06-2024) முற்றுகையிடப்பட்டது.


வவுணதீவு பொலிஸ் நிலைய நிர்வாக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.வரதராஜன் தலைமையில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.


நெடுஞ்சேனை ஆற்றை அண்டிய காட்டுப் பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதோடு, 5 பரல் கோடா மற்றும் காடி போன்ற பதார்த்தங்களுடன், 150 போத்தல் கசிப்பு, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் சில உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேகத்தின் பேரில் 22 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பரல்கள் உள்ளிட்ட பொருட்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வவுணதீவு பொலிஸ் நிலைய நிர்வாக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.வரதராஜன் தெரிவித்தார்.
புதியது பழையவை