காணாமல் போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு!



கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி  காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் சடலமானது நேற்று(09-06-2024) மீட்கப்பட்டுள்ளது.


பிரேத பரிசேதனை

இந்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது  மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை