இந்த வருடம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் இந்த வருடம் 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 30, 227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 6, 965 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 3, 126 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,998 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 2, 441 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தரவுகளின்படி கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 21 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.