மட்டக்களப்பின் அடையாளமாக திகழும், பாலமீன்மடு வெளிச்ச வீட்டினை புனரமைக்கும் பணி


மட்டக்களப்பின் அடையாளமாக திகழும், பாலமீன்மடு வெளிச்ச வீட்டினை புனரமைக்கும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது முன்னெடுத்து வருகின்றது.

1913ம் ஆண்டு பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் 27 மீற்றர் (89 அடி) உயரத்தினை கொண்டதாக அமையப் பெற்ற மேற்படி வெளிச்ச வீடானது பலகாலமாக கவனிப்பாரின்றி காணப்பட்டது.

இந்நிலையில்,  கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எந்திரி .என். சிவலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாநகர சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

தொன்மைமிகு வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் நோக்கிலும் , சுற்றுலா துறையினை மேம்படுத்தும் வகையிலும் குறித்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இம்மாத இறுதியில் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை