இலவச Wi-Fi தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!



மக்கள், பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என  இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவ்வாறான இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக தனது பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.


எனவே, பொது இடங்களில் , மக்கள் இலவச Wi-Fi யை பயன்படுத்தி இணைய பணிகளில் ஈடுபடும் போது அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதியது பழையவை