இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று (17-11-2024) ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது. அக்கூட்டத்திற்கு வருகை தரும்போதே இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.
அக்குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளதாவது, பதில் பொதுச்செயலாளர் அவர்களது பொறுப்பற்ற, தன்னிச்சையான, தான்தோன்றித்தமான சூட்சுமமான செயல்பாடுகள் மூலம் கட்சியின் கூட்டுப்பொறுப்பை உருக்குலைத்த செயற்பாடுகளை விசாரணை செய்யக்கோரி அக்குற்ற பத்திரிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது.