இலங்கை கல்வி நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெறும் முதல் தமிழ் பெண் அதிகாரி



மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் அம்மணி அவர்கள், இன்றைய தினம், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டு, (Appointed as Addl. Commissioner General of Publications, MOE, Isurupaya,Battaramulla.) தமது கடமையை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு உயர்வு பெற்றிருக்கும் முதலாவது தமிழ்ப் பெண் கல்வி அதிகாரி எனும் சாதனையினையும் நிலைநாட்டியுள்ளார்.
புதியது பழையவை