கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று (11-12-2024)அதிகாலை விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மாறுவேடத்தில் சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் துறைநீலாவணை பகுதியில் வைத்து கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட ஒரு தொகை கேரளா கஞ்சா, கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் யாவும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
43 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களும் மத்திய முகாம், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
குறித்த கேரளா கஞ்சா கிளிநொச்சி பகுதியிலிருந்து பேரூந்தூடாக கடத்தப்பட்டு பின்னர் மோட்டார் சைக்கிளூடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இல்கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.