கொழும்பு மாளிகாகந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு - பெண் ஒருவர் காயம்



மாளிகாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூடு, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று(14-12-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


இதன்போது, காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை