புசல்லாவை, பிளக்போரஸ்ட் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செல்வம் சஸ்மிதன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாய், தந்தை, மகன்மார், உறவினர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதில் வீட்டின் இளைய மகனே உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.