மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையால் முன்னெடுக்கும் மனிதநேயப்பணி



மட்டக்களப்பு சைவ ஆலயங்களுக்கு முன்னுதாரணமாக சொல் வடிவிலல்லாது செயல் வடிவில் பல மனிதநேயப் பணிகளை முன்னெடுத்துவரும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையினரின் சிந்தனையில் உருவான ஒரு வறிய குடும்பத்திற்கு ஒரு பசு எனும் வேலைத்திட்டத்தின் 3ம் கட்டம் நேற்று (11-01-2025 )சனிக்கிழமை  முன்னெடுக்கப்பட்டது.

இத் திட்டத்திற்கான பயனாளர்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தலா இரண்டு (02) பேர் வீதம் பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஆறு (06) பயனாளிகளுக்கே  இன்றைய தினம் அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காக பசு வழங்கி வைக்கும் நிகழ்வு ஆலய முன்றலில் இடம் பெற்றது. 

இந் நிகழ்வில் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய  தலைவர்/ வண்ணக்கர், செயலாளர்/வண்ணக்கர், பொருளாளர்/வண்ணக்கர்,தேச மகாசபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



புதியது பழையவை