சிறைச்சாலை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!



எதிர்வரும் 14 ஆம் திகதி  சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு இந்த விசேட வாய்ப்பு கிடைக்கிறது.

அதன்படி அன்றைய தினம், இந்து கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவு மற்றும் இனிப்புகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள் என சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
புதியது பழையவை