கல்முனையில் போதைபொருள் இருவியாபாரிகள் அதிரடிப்படையால் கைது!



கல்முனை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரசகியத்தகவலுகமைய தேடுதல் மேற்கொண்ட போது இவ்விரு சந்தேக நபர்களும் பெருந்தொகையான
#கேரளா_கஞ்சா_மற்றும் ஒரு தொகைப்பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு  சந்தர்ப்பங்களில் புதன்கிழமை (5) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 54 வயது 62 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன், நீண்டகாலமாக இச்சந்தேக நபர்கள் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கஞ்சாவினை விற்பனை செய்தும் விநியோகித்தும் வந்துள்ளனர்

கைதான இருவரில் 7 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர் பெரிய நீலாவணை அக்பர் வீதியைச் சேர்ந்த பிரபல கைக்கடிகாரம் திருத்தும் நபர் என்பதுடன், 4 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்த மற்றைய சந்தேக நபர் கல்முனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடையகத்தை நடாத்தி வந்தவர் என்பதும் மேலதிக விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

மேலும், சந்தேக நபர்கள் வசமிருந்து பெருமளவான கேரளா கஞ்சா பொதிகள் மோட்டார் சைக்கிள், 5 இலட்சம் 90 ஆயிரம் ரூபா பண நோட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், கல்முனை விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்ககைகாக  பொலிஸாரிடம் ஒப்படைக்கத் தாயாராகி வருகின்றனர்.
புதியது பழையவை