கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல்



கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒரு மாணவன் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம்(14.03.2025) காலை நடந்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவரும் 4 மாணவர்களுக்கிடையே சம்பவதினமான நேற்று காலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.


இதன்போது, காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனையடுத்து, காயமடைந்த மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை