கொழும்பு - இராஜகிரிய பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து!



கொழும்பு - இராஜகிரிய பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை (27-05-2025) பிற்பகல் 01.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.


கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை