நுவரெலியாவில் தொடர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக மழையுடனான கடுமையான கற்றும் வீசி வருகிறது இதனால் இன்று (27-05-2025)அதிகாலை 4.00 மணி அளவில் வீசிய காற்று காரணமாக நுவரெலியா - பதுளை வீதியில் உள்ள பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளது.
இதனால் நுவரெலியா - பதுளை வீதி பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி பொலிஸ் அதிகாரிகள் மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் இராணுவத்தினர் ஆகியோரின் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதனால் மரம் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.