மட்டக்களப்பு மந்திரியாறு பகுதியில் - மீன் பிடிக்க சென்றவரை இழுத்துச் சென்ற முதலை



மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் நேற்று மாலை (20-05-2025) இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.

மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலை இழுத்துச் சென்றவர் கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை