ஐக்கிய மக்கள் சக்தி, தங்களை முஸ்லிம் தலைவர்களிடம் அடமானம் வைத்துள்ளதா?



சயித் பிரேமாதாச தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து வந்த உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டதே ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். 2019 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெறும் அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தி தனது பூரண வெற்றிகளை பதிவு செய்ய முடியாமல் தடுமாறிவருகின்றது. 

சயித் பிரேமதாச தலைமையில் இயங்கும் இந்த கட்சி முக்கியமாக சிங்கள மக்கள் மத்தியிலும் மற்றும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்கினை தொடர்ச்சியாக இழந்துவருகின்றது. 

இதற்கு காரணம் ஐக்கிய மக்கள் சக்தியில், முஸ்லிம் தலைவர்களுடைய கைகள் ஓங்கி இருப்பதே ஆகும். இக்கட்சியின் தவிசாளர், பிரதிப் பொதுச் செயலாளர் உட்பட ஐந்து அல்லது ஆறு மிக முக்கிய பொறுப்புகள் முஸ்லிம் தரப்பிடமே உள்ளது.

இதைவிட இந்த கட்சியின் பிரதான பங்காளர்களாக இருக்கும் ரிஷாட் பதூதீன் தலைமையிலான கட்சியும், ரவ் கக்கீம் தலைமையிலான கட்சியும் தமது முழுமையான ஆதிக்கத்தினை இக்கட்சிக்குள் வைத்துள்ளன. 

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மத்தும பண்டா உட்பட முக்கிய உறுப்பினர்கள் இந்த முஸ்லிம் தலைவர்களிடம் பணம்பெற்று வருவதாக கட்சிக்குள் இருக்கும் அதிகமான உயர்மட்ட உறுப்பினர்கள் நம்புகிறார்கள். இலங்கையில் வடகிழக்கு உட்பட தலைநகர் கொழும்பு வரைக்கும் இக்கட்சியின் அனைத்து தீர்மானங்களும், இந்த முஸலிம் தலைவர்களின் விருப்பத்திற்கு இணங்கவே இடம்பெறுவாதாக கட்சியில் இருக்கும் சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்துகிறார்கள். 

இதனால் கட்சியின் பல சிங்கள மற்றும் தமிழ் அமைப்பாளர்களும் மாவட்ட மட்ட தலைவர்களும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுவது அதிகரித்து வருகின்றது.

சயித் பிரேமதாசவுக்கு இந்த விடயங்கள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி அவரையும் இந்த வளையத்தில்,  முஸ்லிம் தலைவர்களிடம் பணம் பெறும் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட ஒரு சில முக்கிய உறுப்பினர்கள் சிக்க வைத்துள்ளனர் என இக்கட்சி சார்த்த தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டு காய் நகர்த்துவதாக தெரியவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் சம்மந்தப்பட்ட சிங்கள் மற்றும் தமிழ் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக ஐக்கிய சக்தி கட்சி வட்டாரத்தில் பரவலான பேச்சு அடிபடுகின்றது. 

2019 ஆண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு பிறகு மததீவிரவாத செயற்பாடுகளினால் முஸ்லீம் தலைவர்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்கள் இன்னும் முற்றாக அகலவில்லை. இந்த நிலையில்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் இருக்கும் குறைபாடுகளே இவ்வாறு முஸ்லிம் தலைவர்களின் கை கட்சியல் ஒங்கி உள்ளது என இக் கட்சியில் இருந்து விலகியவர்கள் கூறிவருகிறார்கள். எது எப்படியோ ஐக்கிய மக்கள் சக்தி தனது செலவாக்கினை சிங்கள மக்கள் மத்தியிலும் மற்றும் தமிழ் மக்கள் மத்தியிலும் வெகுவாக இழந்துள்ளது. 

சயித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தில் இருக்கும் குறைபாடே ஐக்கிய மக்கள் சக்தி தன்னை முஸ்லிம் தலைவர்களிடம் அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அக்கட்சியில் இருக்கும் சிங்கள தலைவர்கள் கூறுகின்றனர்.
புதியது பழையவை