பாணந்துறையில் துப்பாக்கி சூடு! ஒருவர் காயம்



பாணந்துறை, வேகட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (29-)5-2025) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


இதனால், சம்பவ இடத்தில் இருந்த ஒரு தொழிலாளி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அவர் தற்சமயம், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணையை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை