இலஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் சார்ஜண்ட் கைது!



இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக 10 ஆயிரம் ரூபாவை பெற முற்சித்த குற்றச்சாட்டுக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒருவருக்கும், மோட்டார் சைக்கிளை வழங்கிய நபருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக இந்த லஞ்சம் கோரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிண்ணியா காவல்துறையில் இணைக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிண்ணியாவில் உள்ள புஹாரி சந்திக்கு அருகில் இலஞ்சம் பெறச் சென்றபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதியது பழையவை