நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் சீரற்ற வானிலை நீடிப்பதால் மின்சாரத் தடை அதிகரித்துள்ளதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
உங்களது பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டால் CEB Care மொபைல் செயலி மூலமாகவோ அல்லது 1987 என்ற அவரச தொலைபேசி இலக்கத்திற்கோ அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களினடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.