தமிழ்த் தேசிய அரசியலைக் கொச்சைப்படுத்தவோ மலினப்படுத்தவோ வேண்டாம் என முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இன்று நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் மாகாண சபைத்தேர்தலில் சுமந்திரனுக்கு எதிராக ஒரு தும்புத் தடியை நிறுத்த எண்ணுகிறோம் என அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ் கட்சித்தலைவர் கஜேந்திரகுமார் கூறியமை அரசியலில் அவர் இன்னும் பக்குவப் படவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகிறது.
இக் கூற்று மாற்றுத் தலைமை ஒன்று உருவாவதை தடுக்கும் நோக்கிலானதா எனவும் சிந்திக்க வைக்கிறது.
பொதுவேட்பாளர் விடயத்தில் இவர் சிறுபிள்ளைத்தனமாக எடுத்த தீர்மானத்தினால் சினமுற்ற தமிழ் இனம் பொதுத் தேர்தலில் தமது நோக்கை எச்சரிக்கையாக வெளிப்படுத்தியது.
ஸ்ரீகாந்தா ,ஜங்கரநேசன்,தவராஜா ,முதலான தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சக்திகள் நாவடக்கத்தை இவருக்கு கற்பிக்க வேண்டுமென எதிர் பார்க்கின்றேன்.