கதிர்காமம் காட்டுப்பாதை திறப்பு!



நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம முருகன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவை முன்னிட்டு, பக்தர்கள் இன்று (20-06-2025) காலை காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஜூலை 26ஆம் திகதி கதிர்காம முருகன் ஆலயத்தின் கொடியேற்ற விழா ஆரம்பமாகவுள்ளது. “ஆரோஹரா” கோஷங்களுடன் பக்தர்கள் தங்களது காட்டுப்பாதை பயணத்தை இன்று தொடங்கினர்.


ஜூன் 26 கொடியேற்றம் - ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவம்

கதிர்காம திருவிழா ஜூன் 26 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.






இந்நிலையில் பக்தர்களுக்காக அமைந்துள்ள லகுகலை – உகந்தை வன பாதையின் கதவு, இன்றையதினம் காலை 6.00 மணியளவில் உகந்தை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்குப் பிறகு திறக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை