மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று (20-06-2025) மாலை பிரதேச சபை சபா மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது, தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பல்கோஸ் மோகனராசா முன்மொழிந்து வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பை சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்மொழியப்பட்டார்.
இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு முறையில் நடத்த வேண்டுமென உள்ளூராட்சி ஆணையாளரினால் உறுப்பினர்களிடம் கோரப்பட்டது.
திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு 8 உறுப்பினர்களும் 11 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்தனர்.
இதன்போது, தவிசாளராகப் போட்டியிட்ட பல்கோஸ் மோகனராசாக்கு 7 உறுப்பினர்களின் வாக்கும் , கதிர்காமத்தம்பி தெய்வேந்திரனுக்கு 12 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதன் போது கிழக்கு தமிழர் கூட்டமைப்பை சேர்ந்த தவிசாளராகப் போட்டியிட்ட கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அதையடுத்து பிரதித் தவிசாளர் தெரிவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சன்முகநாதன் ரசிகரன் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருந்தார்.
இதுவும் இரசிய வாக்கெடுப்பு முறையிலேயே பிரதித் தவிசாளர் இடம் பெற்றது. இதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் மொஹமெட் ஹைதர் அவர்களுக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதுடன், 1 உறுப்பினர் நிராகரித்து இருந்திருந்தார். பிரதித் தவிசாளர் சண்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த சபைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த ஆறு உறுப்பினர், கிழக்கு தமிழர் கூட்டமைப்பை சேர்ந்த ஏழு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் செய்தி ஒன்று
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சேர்ந்து இருவர் என 19 உறுப்பினர்கள் தெரிவு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.