இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உரிய நகல் சட்டம் இன்று (05-06-2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் இந்த நகல் சட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
இதனை பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான நிசாம் காரியப்பர் ஆமோதித்துள்ளார்.