மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!



மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் நேற்று (24-07-2025) மாலை தீச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த தீப்பரவலினால் சரணாலயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பின்னர் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக களுவாஞ்சிக்குடி பொலிஸாருடன் இணைந்து குருக்கள்மடம் முகாம் இராணுவத்தினர், பொதுமக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.



மேலும், இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்ற நிலையில், குறித்த தீ பரவல் சம்பவம் இப் பறவைகளின் நிலைத்திருப்பிற்கு சிக்கலானதாக அமைந்ததாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தீ பரவலில் பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பேராபத்து வராமல் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதற்கு முன்னதாக கடந்த ஆண்டும் பாரியளவு , தீப்பரவல் ஒன்று குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தில் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை