பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை.!


பாடசாலைகளில்  இவ்வாண்டின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்07.08.2025) நிறைவடைகிறது.

அதன்படி, மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் முதல் கட்டம் இம்மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் நவம்பர் மாதம்  17 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை