புதுக்குடியிருப்பு படுகொலை 35, வது ஆண்டு நினைவு.!


மட்டக்களப்பு மாவட்டம் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் 1990, செப்டம்பர்,21,ல்  இராணுவமும் முஷ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து கூட்டாக 17 தமிழர்கள் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும், குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் தமிழினப்படுகொலைசெய்யப்பட்டனர்.

அன்று வெள்ளிக்கிழமை (21/09/1990) இரவு புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவமும் இராணுவத்துடன் இணைந்த முஷ்லிம் ஊர்காவல் படையினரும், வீடுகளின் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் 45 பேரை, தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென,  கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணக்கென இவ்வாறு அழைத்துச் சென்றவர்களை நோக்கி இராணுவமும், முஷ்லிம் கும்பலும் அவர்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் வெறியாட்டம் ஆடினர். மக்கள் அல்லோலப்பட்டனர், ஊரெல்லாம் கூக்குரல் சத்தம் அதில் சிலர் உயிர் தப்பியுள்ள போதிலும்  அன்று நள்ளிரவு வேளை பெண்கள்இ சிறுவர்கள் உட்பட 17 பேரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டும் பலர் படு காயங்களுடனும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் கொல்லப்பட்டவர்கள்:
1.சி.கதிராம்ப்போடி
2.பா.நல்லையா.                                                                            3.சி.முத்திலிங்கம்
4.மு.இந்திரன்.
5.ஆ.கதிர்காம்ப்போடி
6.வே. புலேந்திரன்.
7.செல்வன்.அ. வரதராசா.
8.செல்வன்.சா.சிவகுமார்.
9.செல்வன்.சா.உதயகைமார்.
10..செல்வி மு.தருமவதி.
11.செல்வி க.கமலேஸ்வரி.
12.செல்வி.லோகநாயகி.
13.திருமதி கமலேஷ்வரி.
14.திருமதி செ.சிவசோதி.
15.திருமதி க.செல்லம்மா.
16.திருமதி க.அழகம்மா.
17.திருமதி க.மகேஷ்வரி.

இந்தப்படுகொலையில் 09, ஆண்களும்08 பெண்களும் மொத்தம் 17, பேர் இதில் சிறு குழந்தைகளும் உள்ளனர். 

இன்று 2025,செப்டம்பர்,21, ல் 35, வது ஆண்டு கடந்தும் இந்த இனப்படுகொலைக்கும் இதுவரை நீதியில்லை.

கடந்த காலங்களில் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முடியாத பொலிசாரின் தடை உத்தரவுகள், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தமையால் ஊர் உறவுகளும் நினைவு வணக்கத்தில் கலந்து கொள்ளாத சந்தர்ப்பங்கள் பல வருடங்களாக இருந்தன.
2020, செப்டம்பர்,21, ல் நான் தனியாக சென்று நினைவு வணக்கத்தை செய்தேன்.

இந்த வருடம் 2025, ல் எந்த ஒரு நினைவேந்தல்களும் செய்வதற்கு எந்த தடைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-பா.அரியநேத்திரன்-
21/09/2025
புதியது பழையவை