மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் (15.09.2023 )அன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த போராட்டம் 730 வது நாளாக இன்று (15.09.2025 ) சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றது .
இரண்டு வருடங்கள் கடந்த போராட்டம்
இதற்கு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவமாணவர் ஒன்றியமும் பேராதரவை வழங்கி இருந்தது.
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் , கால்நடைகளை கொல்லாதே , அரசே வேடிக்கை பார்க்காதே, உரிமைக்காக குரல்கொடுப்போம்.
இரண்டு வருடங்கள் கடந்தும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுவது ஏன், பண்ணையாளர்களுக்கு நிரந்தர மேய்ச்சல் தரையை வழங்கு என்று பல்வேறு கோஷங்களை எழுப்பியும் , பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத், இ.சாணக்கியன் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.