மட்டக்களப்பு மயிலத்தமடு-மாதவனைப் பண்ணையாளர்களின் போராட்டம் 730 நாட்களைக் கடந்தது.!

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் (15.09.2023 )அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டம் 730 வது நாளாக இன்று (15.09.2025 ) சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றது .

இரண்டு வருடங்கள் கடந்த போராட்டம்
இதற்கு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவமாணவர் ஒன்றியமும் பேராதரவை வழங்கி இருந்தது.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் , கால்நடைகளை கொல்லாதே , அரசே வேடிக்கை பார்க்காதே, உரிமைக்காக குரல்கொடுப்போம்.


இரண்டு வருடங்கள் கடந்தும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுவது ஏன், பண்ணையாளர்களுக்கு நிரந்தர மேய்ச்சல் தரையை வழங்கு என்று பல்வேறு கோஷங்களை எழுப்பியும் , பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத், இ.சாணக்கியன் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை