கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை மேற்கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலை புத்தல பொலிசார் நேற்று முன் புதன்கிழமை (03.09.2025) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் மொனராகலை புத்தல பொலிஸ் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் சம்பவதினமான அன்று குறித்த பொலிஸ் கான்ஸ்டபில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் தாயார் பாடசாலைக்கு சென்றுள்ளதாகவும் வரும் போது அவரையம் ஏற்றிக் கொண்டுவந்து விடுமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை பாடசாலையில் இருந்து ஏற்றிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சிறுமியை மறைவான காட்டு பகுதியில்வைத்து பாலியல் சேட்டை செய்துள்ளார். இதன் பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஒருவருடமாக பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் பாடசாலையில் மாணவர்களுக்கு சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அதன் போது குறித்த சிறுமிக்கு பொலிஸ் கான்ஸ்டபிளால் பாலியல் சேட்டை இடம்பெற்றுள்ளதை அறிந்துகொண்டனர்.

இதனையடுத்து சிறுமி, தனக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் இவ்வாறு குறித்த பொலிசால் பாலியல் சேட்டை இடம்பெற்றுள்ளதாக கடிதம் ஒன்றை எழுதி ஆசிரியரிடம் கொடுத்துள்ளதையடுத்து, அவர் இது தொடர்பாக அதிபர் மற்றும் பெற்றோர் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் பொலிசாருக்கு தெரிவித்துள்ளதையடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த கான்ஸ்டபிள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ள நிலையில் அவரை அங்கு வைத்து (03.09.2025) புதன்கிழமை பொலிசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிசார் தெரிவித்தனர்.
புதியது பழையவை