போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மகிழுந்தை ஓட்டி வந்த பெண் வைத்தியர் ஒருவர் கண்டி நகரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் கண்டியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் வைத்தியர் ஆவார்.
கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர், மகிழுந்து தனது கணவருக்கு சொந்தமானது என கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இவர் அந்த மகிழுந்துக்கான எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை, இது குறித்து விசாரணையில் அவரது கணவரின் சகோதரரின் மகிழுந்தின் இலக்க தகடு மகிழுந்தில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.