திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனவெளிக்குளத்துக்கு அருகிலுள்ள வீடென்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று (17.09.2025) இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் முள்ளிப்பொத்தானை-சிறாஜ் நகர் பகுதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான நெய்யது அலி பாயிஸ் (24வயது) எனவும் தெரியவந்துள்ளது.
மனைவி மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் குறித்த நபர் போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த மரணம் தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.